اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟
ஒருவர் தன் இறைவனிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கும்போது, மேலும் அதன் பிறகு (அதற்கு வலுவூட்டும் வண்ணம்) வேறொரு சான்றும் தொடர்ந்து இறைவனிடமிருந்து வந்துள்ளபோது, அத்துடன் இதற்கு முன்பே மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் வந்திருக்கும்போது (பிற உலகாயதவாதிகளைப் போன்று இவரும் இதனை மறுக்க முடியுமா?) இத்தகையோர் இதன்மீது நம்பிக்கை கொள்ளத்தான் செய்வார்கள். மேலும், மனித சமூகங்களைச் சேர்ந்த எவரேனும் இதனை மறுத்தால் அவருக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகமாகும். எனவே, (நபியே!) நீர் இதைப்பற்றி எவ்வித ஐயமும் கொள்ள வேண்டாம். திண்ணமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.