All Surahs

Surah 11

هود

Hud

11. ஸூரத்து ஹூது

123 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

الٓرٰ ۫ كِتٰبٌ اُحْكِمَتْ اٰیٰتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِیْمٍ خَبِیْرٍ ۟ۙ

அலிஃப், லாம், றா. வேதக் கட்டளையாகும் இது. அனைத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாகிய அல்லாஹ்வின் தரப்பிலிருந்து இதனுடைய வசனங்கள் உறுதியான முறையிலும் விரிவாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

2

اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنَّنِیْ لَكُمْ مِّنْهُ نَذِیْرٌ وَّبَشِیْرٌ ۟ۙ

(அந்தக் கட்டளை இதுதான்:) ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்!’ திண்ணமாக, நான் அவன் சார்பில் உங்களை எச்சரிக்கை செய்பவனாகவும் உங்களுக்கு நற்செய்தி கூறுபவனாகவும் இருக்கின்றேன்.

3

وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی وَّیُؤْتِ كُلَّ ذِیْ فَضْلٍ فَضْلَهٗ ؕ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ كَبِیْرٍ ۟

மேலும், நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்புக்கோரி, அவன் பக்கம் திரும்புங்கள்! அப்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்கு அழகான வாழ்வாதாரங்களை வழங்கி இன்புறச் செய்வான். மேலும், சிறப்புக்குரியவர் ஒவ்வொருவருக்கும் அவருடைய சிறப்புக்கேற்ப தன் அருளை வழங்குவான். நீங்கள் புறக்கணிப்பீர்களேயானால், திகிலூட்டக்கூடிய ஒரு மாபெரும் நாளின் வேதனை உங்களுக்கு வந்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.

4

اِلَی اللّٰهِ مَرْجِعُكُمْ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

அல்லாஹ்விடமே நீங்கள் திரும்பிவரவேண்டியுள்ளது. மேலும், அவன் அனைத்தையும் செய்வதற்கு ஆற்றல் உள்ளவனாக இருக்கின்றான்.

5

اَلَاۤ اِنَّهُمْ یَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِیَسْتَخْفُوْا مِنْهُ ؕ اَلَا حِیْنَ یَسْتَغْشُوْنَ ثِیَابَهُمْ ۙ یَعْلَمُ مَا یُسِرُّوْنَ وَمَا یُعْلِنُوْنَ ۚ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

பாருங்கள்! அவருடைய பார்வையை விட்டு மறைந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மக்கள் தங்களுடைய நெஞ்சங்களைத் திருப்பிக் கொள்கின்றார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! இவர்கள் ஆடைகளால் தங்களை மூடி மறைத்துக்கொண்ட போதிலும் அவர்களின் இரகசியங்களையும், அவர்கள் வெளிப்படுத்துகின்றவற்றையும் அல்லாஹ் நன்கறிகின்றான். திண்ணமாக, அவன் நெஞ்சங்களில் மறைந்திருக்கும் இரகசியங்களையும் நன்கறியக்கூடியவனாக இருக்கின்றான்.

6

وَمَا مِنْ دَآبَّةٍ فِی الْاَرْضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزْقُهَا وَیَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا ؕ كُلٌّ فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟

உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை. மேலும் அது வசிக்குமிடத்தையும், சென்று சேரும் இடத்தையும் அவன் நன்கறிகின்றான். அனைத்தும் ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

7

وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِیْ سِتَّةِ اَیَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَی الْمَآءِ لِیَبْلُوَكُمْ اَیُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَىِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟

அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் “நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!” என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: “இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை.”

8

وَلَىِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰۤی اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّیَقُوْلُنَّ مَا یَحْبِسُهٗ ؕ اَلَا یَوْمَ یَاْتِیْهِمْ لَیْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠

ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் அவர்களுடைய தண்டனையை தாமதப்படுத்தினால் அதனைத் தடுத்து வைத்திருப்பது எது? என்று கேட்க ஆரம்பித்துவிடுகின்றார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அத்தண்டனை அவர்களிடம் வந்துவிடும் நாளில் அவர்களை விட்டு அதனை யாராலும் தடுத்துவிட முடியாது! மேலும், எதனை அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தார்களோ அதுவே அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்!

9

وَلَىِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُ ۚ اِنَّهٗ لَیَـُٔوْسٌ كَفُوْرٌ ۟

மேலும், மனிதனுக்கு எப்போதேனும் நாம் நமது அருட்கொடையை வழங்கிய பிறகு அதனை அவனிடமிருந்து பறித்துக் கொண்டால், திண்ணமாக அவன் நிராசையடைந்து விடுகின்றான். மேலும், நன்றி கெட்டவன் ஆகிவிடுகின்றான்.

10

وَلَىِٕنْ اَذَقْنٰهُ نَعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ ذَهَبَ السَّیِّاٰتُ عَنِّیْ ؕ اِنَّهٗ لَفَرِحٌ فَخُوْرٌ ۟ۙ

மேலும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்துக்குப் பிறகு அவனுக்கு நாம் அருளை வழங்கி இன்புறச் செய்தால், ‘துன்பங்கள் எல்லாம் என்னை விட்டு நீங்கிவிட்டன!’ என்று கூறுகின்றான். பிறகு பூரிப்பில் திளைத்தவனாகவும் அகந்தை கொண்டவனாகவும் ஆகிவிடுகின்றான்;

11

اِلَّا الَّذِیْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِیْرٌ ۟

ஆனால் பொறுமையை மேற்கொண்டு நற்செயல்கள் புரிபவர்கள்தாம் இத்தகைய குறைபாடு இல்லாதவர்கள். அவர்களுக்குத்தான் மன்னிப்பும் பெரும்கூலியும் இருக்கின்றன.

12

فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا یُوْحٰۤی اِلَیْكَ وَضَآىِٕقٌ بِهٖ صَدْرُكَ اَنْ یَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ ؕ اِنَّمَاۤ اَنْتَ نَذِیْرٌ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ وَّكِیْلٌ ۟ؕ

(நபியே!) வஹியின் மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலவற்றை நீர் (எடுத்துரைக்காமல்) விட்டு விடுவது கூடாது! மேலும், ‘ஏதேனும் செல்வக் கருவூலம் இவருக்கு இறக்கி வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருடன் யாரேனும் வானவர் வந்திருக்கக் கூடாதா?’ என்றெல்லாம் இவர்கள் கூறுவதால் உமது நெஞ்சம் சஞ்சலமடைவதும் கூடாது. நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்! அதற்குப் பிறகு அனைத்திற்கும் பொறுப்பேற்பவனாக அல்லாஹ் இருக்கின்றான்.

13

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَیٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

“இவர்தான் இவ்வேதத்தைப் புனைந்து கூறுகிறார்” என்று இவர்கள் வாதிடுகின்றார்களா? நீர் கூறும்: “அவ்வாறாயின் இதுபோன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் இயற்றிக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர யார் யார் (உங்கள் கடவுள்களாக) இருக்கின்றார்களோ அவர்களையும் (முடிந்தால்) உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள்; (அவர்களைக் கடவுள்களாகக் கருதுவதில்) நீங்கள் உண்மையானவர்களாயின்!

14

فَاِلَّمْ یَسْتَجِیْبُوْا لَكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟

ஆனால், அவர்கள் உங்கள் உதவிக்கு வரவில்லையென்றால், இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே இறக்கியருளப்பட்டிருக்கிறது என்பதையும் மேலும், அவனைத் தவிர உண்மையான இறைவன் வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்! இனியாவது நீங்கள் (இந்த சத்தியத்திற்கு) முற்றிலும் அடிபணிவீர்களா?

15

مَنْ كَانَ یُرِیْدُ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا نُوَفِّ اِلَیْهِمْ اَعْمَالَهُمْ فِیْهَا وَهُمْ فِیْهَا لَا یُبْخَسُوْنَ ۟

எவர்கள் இவ்வுலக வாழ்வையும், அதன் அலங்காரத்தையும் நாடுகின்றார்களோ அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்கேற்ற கூலியை இங்கே நாம் அளித்து விடுகின்றோம்; அதில் அவர்களுக்கு எவ்விதக் குறைபாடும் செய்யப்பட மாட்டாது.

16

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَیْسَ لَهُمْ فِی الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖؗ وَحَبِطَ مَا صَنَعُوْا فِیْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

ஆனால், இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறொன்றும் இருக்காது. மேலும், அவர்கள் இவ்வுலகில் உருவாக்கியவை அனைத்தும் அடியோடு அழிந்து போய் விட்டன (என்பதும்) அவர்கள் செய்து வந்தவை யாவும் வீணானவை (என்பதும் அங்கு அவர்களுக்குப் புரிந்துவிடும்)!

17

اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟

ஒருவர் தன் இறைவனிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கும்போது, மேலும் அதன் பிறகு (அதற்கு வலுவூட்டும் வண்ணம்) வேறொரு சான்றும் தொடர்ந்து இறைவனிடமிருந்து வந்துள்ளபோது, அத்துடன் இதற்கு முன்பே மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருட்கொடையாகவும் வந்திருக்கும்போது (பிற உலகாயதவாதிகளைப் போன்று இவரும் இதனை மறுக்க முடியுமா?) இத்தகையோர் இதன்மீது நம்பிக்கை கொள்ளத்தான் செய்வார்கள். மேலும், மனித சமூகங்களைச் சேர்ந்த எவரேனும் இதனை மறுத்தால் அவருக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகமாகும். எனவே, (நபியே!) நீர் இதைப்பற்றி எவ்வித ஐயமும் கொள்ள வேண்டாம். திண்ணமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமாகும். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

18

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ؕ اُولٰٓىِٕكَ یُعْرَضُوْنَ عَلٰی رَبِّهِمْ وَیَقُوْلُ الْاَشْهَادُ هٰۤؤُلَآءِ الَّذِیْنَ كَذَبُوْا عَلٰی رَبِّهِمْ ۚ اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ

அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்களைவிட கொடிய அக்கிரமக்காரர்கள் யார்? இத்தகையோர் தம் இறைவனின் திருமுன் கொண்டு வரப்படுவார்கள். அப்போது சாட்சியாளர்கள் “இவர்கள்தாம் தம் இறைவன் மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள்” என்று கூறுவார்கள். எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.

19

الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟

இந்த அக்கிரமக்காரர்கள் அல்லாஹ்வின் வழியில் செல்லவிடாமல் மக்களைத் தடுக்கின்றார்கள்; அதனைக் கோணலாக்க விரும்புகின்றார்கள். மேலும், மறுமையை மறுக்கின்றார்கள்

20

اُولٰٓىِٕكَ لَمْ یَكُوْنُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ۘ یُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ ؕ مَا كَانُوْا یَسْتَطِیْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا یُبْصِرُوْنَ ۟

இப்புவியில் அல்லாஹ்வை இயலாமையிலாக்கும் வலிமையை அவர்கள் பெற்றிருக்கவில்லை; மேலும், அல்லாஹ்வுக்கு எதிராக அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இருக்கவில்லை! இப்போது இவர்களுக்கு இரு மடங்கு வேதனை அளிக்கப்படும். இவர்களால் எதையும் செவியுறவும் முடியவில்லை; எதுவும் இவர்களுக்குப் புலப்படவும் இல்லை.

21

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

இவர்கள் தமக்குத் தாமே இழப்பினை ஏற்படுத்திக் கொண்டவர்களாவர். மேலும், இவர்கள் தாமாக ஏற்படுத்திக் கொண்டிருந்த அனைத்தும் இவர்களை விட்டு மறைந்துவிடும்.

22

لَا جَرَمَ اَنَّهُمْ فِی الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ۟

மறுமையில் இவர்கள்தாம் மற்றவர்களைவிட அதிக இழப்பிற்குரியவர்களாய் இருப்பர் என்பதில் ஐயமே இல்லை!

23

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْۤا اِلٰی رَبِّهِمْ ۙ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ ۚ هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

திண்ணமாக, எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, தம் இறைவனுக்கே உரித்தானவர்களாகி விடுகின்றார்களோ அவர்கள்தாம் சுவனவாசிகள்! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.

24

مَثَلُ الْفَرِیْقَیْنِ كَالْاَعْمٰی وَالْاَصَمِّ وَالْبَصِیْرِ وَالسَّمِیْعِ ؕ هَلْ یَسْتَوِیٰنِ مَثَلًا ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟۠

இவ்விரு வகையினரின் உவமை இரு மனிதர்களைப் போன்றுள்ளது: ஒருவன் குருடனாகவும் செவிடனாகவும் இருக்கின்றான். மற்றொருவன் பார்வையுடையவனாகவும் செவியுறுபவனாகவும் இருக்கின்றான். இவ்விருவரும் சமமானவராய் ஆக முடியுமா? (இவ்வுவமையின் மூலம்) நீங்கள் எந்த ஒரு படிப்பினையும் பெறுவதில்லையா?

25

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖۤ ؗ اِنِّیْ لَكُمْ نَذِیْرٌ مُّبِیْنٌ ۟ۙ

திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் தூதராக அனுப்பினோம். (அப்போதும் மக்களின் நிலைமை இவ்வாறே இருந்தது. நூஹ் கூறினார்:) நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் ஆவேன்.

26

اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ اَلِیْمٍ ۟

அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் நீங்கள் அடிபணியாதீர்கள்! (இல்லையானால்) துன்புறுத்தும் நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளுமோ என்று நான் அஞ்சுகின்றேன்.”

27

فَقَالَ الْمَلَاُ الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِیْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِیَ الرَّاْیِ ۚ وَمَا نَرٰی لَكُمْ عَلَیْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِیْنَ ۟

(அவருடைய அறிவுரையை) ஏற்க மறுத்த அவருடைய சமுதாயத் தலைவர்கள் கூறினார்கள்: “எங்களுடைய பார்வையில் நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறல்லர்...! மேலும், எங்களிடையே யார் மிகவும் இழிவானவர்களோ அவர்கள் மட்டுமே சிந்திக்காமல் உம்மைப் பின்பற்றுவதைப் பார்க்கின்றோம். ஆக, எங்களைவிட எவ்விதச் சிறப்பும் உமக்கு இருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை. உண்மையில் உங்களைப் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்.”

28

قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّیَتْ عَلَیْكُمْ ؕ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ ۟

அதற்கு நூஹ் கூறினார்: “என் சமுதாயத்தினரே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான சான்றினைப் பெற்றுள்ளேன்; மேலும், அவன் தனது தனிப்பட்ட அருளையும் எனக்கு வழங்கியிருக்கின்றான். ஆனால் அது உங்கள் பார்வைக்குப் புலப்படுவதில்லை; நீங்கள் அதனை ஏற்றுக்கொள்வதுமில்லை எனில், நாம் அதனை வலிந்து உங்கள் மீது திணிக்க முடியுமா?

29

وَیٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ مَالًا ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ وَمَاۤ اَنَا بِطَارِدِ الَّذِیْنَ اٰمَنُوْا ؕ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟

மேலும், என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பொருளும் கேட்கவில்லை. என்னுடைய கூலியோ அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளது. மேலும், எவர்கள் (எனது பேச்சை) ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நான் விரட்டுபவன் அல்லன். திண்ணமாக, அவர்கள் தங்களுடைய இறைவனைச் சந்திக்க இருக்கின்றார்கள்; ஆனால் நான் உங்களை அறியாமையில் உழன்று கொண்டிருக்கும் சமுதாயத்தினராய்ப் பார்க்கின்றேன்.

30

وَیٰقَوْمِ مَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ ۟

மேலும், என் சமுதாயத்தினரே! நான் இவர்களை விரட்டிவிட்டால், அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? இதைக்கூட நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?

31

وَلَاۤ اَقُوْلُ لَكُمْ عِنْدِیْ خَزَآىِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَیْبَ وَلَاۤ اَقُوْلُ اِنِّیْ مَلَكٌ وَّلَاۤ اَقُوْلُ لِلَّذِیْنَ تَزْدَرِیْۤ اَعْیُنُكُمْ لَنْ یُّؤْتِیَهُمُ اللّٰهُ خَیْرًا ؕ اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِیْۤ اَنْفُسِهِمْ ۖۚ اِنِّیْۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِیْنَ ۟

மேலும், அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன என்றும், நான் மறைவானவற்றை அறிபவன் என்றும் உங்களிடம் கூறவில்லை. நான் ஒரு வானவர் என்றும் வாதிடவில்லை. மேலும், எவர்களை உங்கள் கண்கள் இழிந்தவர்களாய்க் காண்கின்றனவோ அவர்களைக் குறித்து ‘அல்லாஹ் எந்த நன்மையையும் அவர்களுக்கு அளிக்கவில்லை’ என்றும் நான் கூற மாட்டேன். அவர்களின் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ்தான் நன்கறிகின்றான். (இதற்கு மாறாக நான் கூறினால்) திண்ணமாக நான் அக்கிரமக்காரனாகி விடுவேன்!”

32

قَالُوْا یٰنُوْحُ قَدْ جٰدَلْتَنَا فَاَكْثَرْتَ جِدَالَنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

இறுதியில் அவர்கள் “நூஹே! நீர் எங்களிடம் தர்க்கம் புரிந்துவிட்டீர்! அதுவும் அளவுக்கதிகமாக தர்க்கம் செய்துவிட்டீர்! நீர் உண்மையாளராயின் எந்த வேதனையைப் பற்றி எங்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றீரோ அந்த வேதனையை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று கூறினார்கள்.

33

قَالَ اِنَّمَا یَاْتِیْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَآءَ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ ۟

அதற்கு மறுமொழியாக நூஹ் கூறினார்: “அல்லாஹ் நாடினால் அவனே அதனை உங்களிடம் கொண்டு வருவான். (அது வந்துவிட்டால்) அதனைத் தடுத்து நிறுத்தும் அளவுக்கு நீங்கள் வலிமையுடையவர்கள் அல்லர்.

34

وَلَا یَنْفَعُكُمْ نُصْحِیْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ یُرِیْدُ اَنْ یُّغْوِیَكُمْ ؕ هُوَ رَبُّكُمْ ۫ وَاِلَیْهِ تُرْجَعُوْنَ ۟ؕ

உங்களை வழிகேட்டிலாழ்த்திட வேண்டுமென்று அல்லாஹ் நாடியிருந்தால், உங்களின் நன்மைக்காக நான் எது கூறினாலும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளித்திடாது. அவன்தான் உங்கள் இறைவன்; அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்!”

35

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَعَلَیَّ اِجْرَامِیْ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ۟۠

“இதனை இவரே சுயமாகப் புனைந்துள்ளார்” என்று (நபியே) இவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறும்: “நானே இதனைச் சுயமாகப் புனைந்திருந்தால் அந்தக் குற்றத்திற்கு நானே பொறுப்பாளி ஆவேன். ஆனால் நீங்கள் செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளி அல்லன்.”

36

وَاُوْحِیَ اِلٰی نُوْحٍ اَنَّهٗ لَنْ یُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟ۚۖ

மேலும், நூஹுக்கு இவ்வாறு வஹி அனுப்பப்பட்டது: “உம்முடைய சமுதாயத்தினரில் எவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்களோ அவர்களைத் தவிர இனி வேறெவரும் நம்பிக்கை கொள்ளப் போவதில்லை. எனவே, அவர்களின் தவறான செயல்களுக்காக நீர் துயரப்பட வேண்டாம்.

37

وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْیُنِنَا وَوَحْیِنَا وَلَا تُخَاطِبْنِیْ فِی الَّذِیْنَ ظَلَمُوْا ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ۟

மேலும், நமது கண்காணிப்பில் நம் கட்டளைக்கேற்ப ஒரு கப்பலைக் கட்டத் தொடங்குவீராக! மேலும், அநீதி இழைத்தவர்களுக்காக என்னிடம் பரிந்துரை செய்யாதீர்! அவர்கள் அனைவரும் மூழ்கடிக்கப்படுபவர்களேயாவர்”.

38

وَیَصْنَعُ الْفُلْكَ ۫ وَكُلَّمَا مَرَّ عَلَیْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ ؕ قَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَ ۟ؕ

நூஹ் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்தார். அவருடைய சமுதாயத் தலைவர்களில் எவரேனும் அவரைக் கடந்து செல்லும்போதெல்லாம் அவரை ஏளனம் செய்தனர். அதற்கு அவர் கூறினார்: “நீங்கள் எங்களைப் பார்த்து ஏளனமாய்ச் சிரிக்கின்றீர்கள் எனில், நீங்கள் சிரிப்பது போன்று நாங்களும் உங்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருக்கிறோம்!

39

فَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَیَحِلُّ عَلَیْهِ عَذَابٌ مُّقِیْمٌ ۟

இழிவுபடுத்தக்கூடிய வேதனைக்கு யார் ஆளாகப் போகின்றார் என்பதையும், தடுத்து நிறுத்த முடியாத வேதனை யார் மீது இறங்கப் போகின்றது என்பதையும் வெகு விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.”

40

حَتّٰۤی اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ قُلْنَا احْمِلْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِیْلٌ ۟

இறுதியில் நம்முடைய கட்டளை வந்துவிட்டது; மேலும் அந்த உலை அடுப்பு பொங்கியது. அப்போது நாம் கூறினோம்: “எல்லா வகையான பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியை இக்கப்பலில் ஏற்றிக்கொள்வீராக! உம்முடைய குடும்பத்தினரையும் யாரைக் குறித்து முன்னரே கூறப்பட்டு விட்டதோ அவர்களைத் தவிர அதில் ஏற்றிக் கொள்வீராக! மேலும், யார்யாரெல்லாம் இறைநம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்களையும் (ஏற்றிக் கொள்வீராக!)” மேலும், நூஹுடன் இறைநம்பிக்கை கொண்டிருந்தவர்கள் குறைவாகவே இருந்தார்கள்;

41

وَقَالَ ارْكَبُوْا فِیْهَا بِسْمِ اللّٰهِ مَؔجْرٖىهَا وَمُرْسٰىهَا ؕ اِنَّ رَبِّیْ لَغَفُوْرٌ رَّحِیْمٌ ۟

மேலும், நூஹ் கூறினார்: “இதில் ஏறிக் கொள்ளுங்கள்! இது செல்வதும் நிலை கொள்வதும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டே ஆகும். திண்ணமாக, என் அதிபதி பெரிதும் மன்னிப்பு வழங்குபவனாகவும் கருணை பொழிபவனாகவும் இருக்கின்றான்.”

42

وَهِیَ تَجْرِیْ بِهِمْ فِیْ مَوْجٍ كَالْجِبَالِ ۫ وَنَادٰی نُوْحُ بْنَهٗ وَكَانَ فِیْ مَعْزِلٍ یّٰبُنَیَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِیْنَ ۟

அக்கப்பல் அவர்களைச் சுமந்து சென்று கொண்டிருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் மலைபோல் உயர்ந்து கொண்டிருந்தது. நூஹுடைய மகன் தொலைவில் இருந்தான். அவர் தம் மகனை கூவியழைத்துக் கூறினார்: “என் அன்பு மகனே! எங்களோடு நீயும் ஏறிக்கொள்; நிராகரிப்பாளர்களுடன் இருக்காதே!”

43

قَالَ سَاٰوِیْۤ اِلٰی جَبَلٍ یَّعْصِمُنِیْ مِنَ الْمَآءِ ؕ قَالَ لَا عَاصِمَ الْیَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ ۚ وَحَالَ بَیْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِیْنَ ۟

அதற்கு அவன் பதிலளித்தான்: “நான் இப்போதே ஒரு மலையின் மீது ஏறிக்கொள்கின்றேன்; அது என்னை வெள்ளத்திலிருந்து காப்பாற்றிவிடும்.” அதற்கு அவர் கூறினார்: “இன்று அல்லாஹ்வின் தீர்ப்பிலிருந்து காப்பாற்றக் கூடியது எதுவும் இல்லை; ஆனால், அல்லாஹ் யாருக்குக் கருணை புரிந்தானோ அவர்கள் மட்டும் காப்பாற்றப்படுவார்கள்.” இதற்குள்ளாக இருவருக்குமிடையே ஓர் அலை குறுக்கிட்டுவிட்டது. மேலும் மூழ்கடிக்கப்பட்டவர்களில் அவன் சேர்ந்து விட்டான்!

44

وَقِیْلَ یٰۤاَرْضُ ابْلَعِیْ مَآءَكِ وَیٰسَمَآءُ اَقْلِعِیْ وَغِیْضَ الْمَآءُ وَقُضِیَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَی الْجُوْدِیِّ وَقِیْلَ بُعْدًا لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟

பின்னர், “பூமியே! உனது நீர் முழுவதையும் விழுங்கிவிடு; வானமே, நிறுத்திக்கொள்!” என்று கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நீர் வற்றிவிட்டது. கட்டளை நிறைவேற்றப்பட்டுவிட்டது. மேலும் கப்பல், ஜூதி எனும் மலையில் நிலை கொண்டது; பிறகு கூறப்பட்டது: “ஒழிந்து விட்டார்கள், அக்கிரமம் புரிந்த மக்கள்!”

45

وَنَادٰی نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِیْ مِنْ اَهْلِیْ وَاِنَّ وَعْدَكَ الْحَقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِیْنَ ۟

நூஹ் தன் இறைவனிடம் பிரார்த்தித்துக் கூறினார்: “என் இறைவனே! என்னுடைய மகன் எனது குடும்பத்தைச் சேர்ந்தவன்; மேலும், திண்ணமாக உனது வாக்குறுதி உண்மையானதாகும். மேலும், தீர்ப்பளிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவனும் உயர்ந்தவனுமாவாய்!”

46

قَالَ یٰنُوْحُ اِنَّهٗ لَیْسَ مِنْ اَهْلِكَ ۚ اِنَّهٗ عَمَلٌ غَیْرُ صَالِحٍ ۖؗۗ فَلَا تَسْـَٔلْنِ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ ؕ اِنِّیْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِیْنَ ۟

அதற்கு அல்லாஹ் பதிலளித்தான்: “நூஹே! திண்ணமாக அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். அவன் ஒரு வீணான ‘செயல்’ ஆவான். எதனுடைய உண்மை நிலையை நீர் அறிய மாட்டீரோ அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்! அறிவிலிகளில் நீரும் ஒருவராகிவிட வேண்டாம் என்று நான் உம்மை அறிவுறுத்துகிறேன்.”

47

قَالَ رَبِّ اِنِّیْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْـَٔلَكَ مَا لَیْسَ لِیْ بِهٖ عِلْمٌ ؕ وَاِلَّا تَغْفِرْ لِیْ وَتَرْحَمْنِیْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِیْنَ ۟

உடனே, நூஹ் பணிந்து கூறினார்: “என் இறைவனே! எதைப் பற்றி எனக்கு அறிவு இல்லையோ அதைப்பற்றி உன்னிடம் கேட்பதைவிட்டு உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ என்னை மன்னிக்காவிட்டால் மேலும், அருள் புரியாவிட்டால் நான் அழிந்து போய்விடுவேன்!”

48

قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟

கட்டளை அருளப்பட்டது: “நூஹே! இறங்குவீராக; உம்மீதும், உம்முடன் இருக்கும் சமூகத்தின் மீதும் நம்முடைய சாந்தியும் அருள்வளங்களும் உண்டாகட்டும்! மேலும், உங்களில் வேறு சில சமூகங்களும் (தோன்ற) உள்ளன. அவர்களுக்கு சொற்ப காலத்திற்கான வாழ்க்கை வசதிகளை வழங்குவோம். பிறகு, நம்மிடமிருந்து துன்புறுத்தும் வேதனை வந்து அவர்களைப் பிடித்துக் கொள்ளும்!”

49

تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَیْبِ نُوْحِیْهَاۤ اِلَیْكَ ۚ مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا ۛؕ فَاصْبِرْ ۛؕ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِیْنَ ۟۠

(நபியே!) இவை மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு அறிவிக்கின்றோம். இதற்கு முன்னர் நீரும் இவற்றை அறிந்திருக்கவில்லை; உம்முடைய சமுதாயத்தினரும் இவற்றை அறிந்திருக்கவில்லை. எனவே பொறுமையை மேற்கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் நல்ல முடிவு இறையச்சம் உள்ளவர்களுக்கே உரியதாகும்.

50

وَاِلٰی عَادٍ اَخَاهُمْ هُوْدًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ ۟

மேலும், ஆத் சமுதாயத்தினரிடம் அவர்களின் சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத் தவரே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. நீங்கள் பொய்யானவற்றைத்தான் (கடவுள்களாக) ஏற்படுத்தி வைத்திருக்கிறீர்கள்.

51

یٰقَوْمِ لَاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی الَّذِیْ فَطَرَنِیْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ ۟

என் சமுதாயத்தினரே! இந்தப் பணிக்காக நான் உங்களிடம் எந்தப் பிரதிபலனையும் கோரவில்லை. என்னுடைய கூலி என்னைப் படைத்தவன் பொறுப்பில் உள்ளது. நீங்கள் சிந்தித்துணர்வதில்லையா?

52

وَیٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ یُرْسِلِ السَّمَآءَ عَلَیْكُمْ مِّدْرَارًا وَّیَزِدْكُمْ قُوَّةً اِلٰی قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِیْنَ ۟

மேலும், என் சமுதாயத்தினரே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பின்னர் அவன் பக்கம் திரும்புங்கள்; உங்கள் மீது மழையை அதிகமாகப் பொழியும்படிச் செய்வான். மேலும், உங்களுக்கு வலிமைக்கு மேல் வலிமையை வழங்குவான். எனவே நீங்கள் பாவம் புரிபவர்களாகி (இறைவனுக்கு அடிபணிவதிலிருந்து) முகம் திருப்பிக் கொள்ளாதீர்கள்!”

53

قَالُوْا یٰهُوْدُ مَا جِئْتَنَا بِبَیِّنَةٍ وَّمَا نَحْنُ بِتَارِكِیْۤ اٰلِهَتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِیْنَ ۟

அவர்கள் பதில் கூறினார்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் தெளிவான சான்று எதனையும் கொண்டுவரவில்லை. மேலும், நீர் கூறுவதால் நாங்கள் எங்களுடைய கடவுள்களை விட்டுவிடக் கூடியவர்களல்லர். மேலும், உம்மீது நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களாகவும் இல்லை;

54

اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَرٰىكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْٓءٍ ؕ قَالَ اِنِّیْۤ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْۤا اَنِّیْ بَرِیْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۟ۙ

எங்கள் கடவுள்களில் ஏதோ ஒரு கடவுள் உம்மைத் தாக்கியிருக்கிறது என்றே நாங்கள் கருதுகின்றோம்.” அதற்கு ஹூத் கூறினார்: “அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களை அவனுடைய இறைமையில் நீங்கள் இணையாக்குகின்றீர்கள். அவற்றுக்கும் எனக்கும் திண்ணமாக எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகின்றேன்; நீங்களும் சாட்சிகளாய் இருங்கள்!

55

مِنْ دُوْنِهٖ فَكِیْدُوْنِیْ جَمِیْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ ۟

நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்வதில் எந்தக் குறையும் வைக்காதீர்கள்! பிறகு சிறிதும் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்!

56

اِنِّیْ تَوَكَّلْتُ عَلَی اللّٰهِ رَبِّیْ وَرَبِّكُمْ ؕ مَا مِنْ دَآبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ بِنَاصِیَتِهَا ؕ اِنَّ رَبِّیْ عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟

திண்ணமாக நான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாகிய அல்லாஹ்வையே முழுவதும் சார்ந்திருக்கின்றேன். எந்த உயிரினமானாலும் அதன் குடுமி அவனுடைய பிடியிலேயே உள்ளது! நிச்சயமாக என் இறைவன் நேரான வழியில் இருக்கின்றான்.

57

فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖۤ اِلَیْكُمْ ؕ وَیَسْتَخْلِفُ رَبِّیْ قَوْمًا غَیْرَكُمْ ۚ وَلَا تَضُرُّوْنَهٗ شَیْـًٔا ؕ اِنَّ رَبِّیْ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟

நீங்கள் புறக்கணித்தால் (புறக்கணித்துக் கொள்ளுங்கள்!) எந்தத் தூதுச் செய்தியுடன் நான் உங்களிடம் அனுப்பப்பட்டேனோ அதனை நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். இனி என் இறைவன் உங்களுக்குப் பகரமாக வேறொரு சமுதாயத்தினரைக் கொண்டு வருவான். நீங்கள் யாதொரு தீங்கும் அவனுக்கு இழைத்திட முடியாது. உறுதியாக என் இறைவன் அனைத்துப் பொருள்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்.”

58

وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا هُوْدًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَنَجَّیْنٰهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟

பிறகு நம்முடைய கட்டளை வந்தபோது, நாம் நமது அருளால் ஹூதுக்கும் அவருடன் நம்பிக்கை கொண்டிருந்தவர்களுக்கும் ஈடேற்றம் அளித்தோம்; மேலும் கடுமையான வேதனை யிலிருந்து அவர்களைக் காப்பாற்றினோம்.

59

وَتِلْكَ عَادٌ ۙ۫ جَحَدُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْۤا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِیْدٍ ۟

இவர்கள்தாம் ஆத் இனத்தவர்! இவர்கள் தம் இறைவனின் சான்றுகளை மறுத்தார்கள். அவனுடைய தூதர்களின் அழைப்பையும் ஏற்கவில்லை. மேலும், சத்தியத்துக்கு எதிரியான கொடுங்கோலர்கள் ஒவ்வொருவரின் கட்டளையையும் பின்பற்றிக் கொண்டிருந்தார்கள்.

60

وَاُتْبِعُوْا فِیْ هٰذِهِ الدُّنْیَا لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ اَلَاۤ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ ؕ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ ۟۠

இறுதியில், இவ்வுலகிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு அவர்கள் ஆளானார்கள். மறுமைநாளிலும் அல்லாஹ்வின் சாபத்திற்கு ஆளாகுவார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! ஆத் இனத்தவர்கள் தம் இறைவனுக்கு மாறு செய்தார்கள். தெரிந்து கொள்ளுங்கள்! தூக்கி எறியப்பட்டார்கள், ஹூதுடைய சமுதாயத்தினரான ஆத் மக்கள்!

61

وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِیْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ قَرِیْبٌ مُّجِیْبٌ ۟

ஸமூத் இனத்தாரிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. அவன்தான் உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். மேலும், அதில் உங்களை வாழச் செய்துள்ளான். எனவே, அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பின்னர் அவன் பக்கம் நீங்கள் மீளுங்கள்! திண்ணமாக என் இறைவன் அருகில் இருக்கின்றான். (பிரார்த்தனைகளுக்குப்) பதிலளிப்பவனாக இருக்கின்றான்.”

62

قَالُوْا یٰصٰلِحُ قَدْ كُنْتَ فِیْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَاۤ اَتَنْهٰىنَاۤ اَنْ نَّعْبُدَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟

அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! இதற்கு முன்போ எங்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்குரியவராய் எங்கள் மத்தியில் இருந்தீர்! இப்பொழுதோ எங்கள் மூதாதையர் வணங்கிக் கொண்டிருந்த கடவுள்களை நாங்கள் வணங்குவதை விட்டு எங்களைத் தடுக்கின்றீரே? மேலும், நீர் எந்த நெறியின் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதுபற்றிக் கடும் சந்தேகத்திலேயே நாங்கள் இருக்கின்றோம். அது எங்களைப் பெரும் மனக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது!”

63

قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ مِنْهُ رَحْمَةً فَمَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ عَصَیْتُهٗ ۫ فَمَا تَزِیْدُوْنَنِیْ غَیْرَ تَخْسِیْرٍ ۟

அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! இதனையும் கொஞ்சம் சிந்தித்தீர்களா? நான் என்னுடைய அதிபதியிடமிருந்து தெளிவான ஒரு சான்றினைப் பெற்று, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருக்கும் நிலையில் நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்வின் பிடியிலிருந்து என்னைக் காப்பாற்றுபவர் யார்? எனக்கு மேலும் இழப்பை ஏற்படுத்துவதைத் தவிர வேறு என்னதான் உங்களால் செய்ய இயலும்?

64

وَیٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ قَرِیْبٌ ۟

மேலும் என் சமுதாயத்தினரே! (பாருங்கள்) இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம்! உங்களுக்கு ஒரு சான்றாகத் திகழ்கின்றது. எனவே இதனை அல்லாஹ்வின் பூமியில் (சுதந்திரமாய்) மேய்வதற்கு விட்டுவிடுங்கள்; இதற்கு யாதொரு தீங்கும் இழைக்காதீர்கள்! அவ்வாறு தீங்கிழைத்தால், இறைவனின் வேதனை உங்களைப் பீடிப்பதற்கு வெகுநேரம் ஆகாது!”

65

فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِیْ دَارِكُمْ ثَلٰثَةَ اَیَّامٍ ؕ ذٰلِكَ وَعْدٌ غَیْرُ مَكْذُوْبٍ ۟

ஆயினும், அவர்கள் அந்த ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள்! அப்போது ஸாலிஹ் (அம்மக்களுக்கு) எச்சரிக்கை செய்தார்: “மூன்று நாட்கள் உங்கள் வீடுகளில் சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்! இந்தக் காலத் தவணை பொய்யானதல்ல!”

66

فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا صٰلِحًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْیِ یَوْمِىِٕذٍ ؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟

இறுதியில், நம் தீர்ப்பு(க்கான வேளை) வந்துவிட்டது. இப்போது, நமது அருளால் ஸாலிஹையும் அவரோடு நம்பிக்கை கொண்டிருந்தவர்களையும் காப்பாற்றினோம்; மேலும், அந்நாளின் இழிவிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தோம். திண்ணமாக, உம் இறைவன் மாபெரும் வலிமையுடையவனும் அனைவரையும் மிகைத்தவனும் ஆவான்.

67

وَاَخَذَ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ

அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கர ஓசை தாக்கியது! அவர்கள் தம் வீடுகளில் அப்படியப்படியே முகம் குப்புற வீழ்ந்து மடிந்துவிட்டனர்;

68

كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ اَلَاۤ اِنَّ ثَمُوْدَاۡ كَفَرُوْا رَبَّهُمْ ؕ اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ۟۠

அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பதுபோல! தெரிந்து கொள்ளுங்கள்! ஸமூத் இனத்தார் தம் இறைவனை நிராகரித்தார்கள்; தெரிந்து கொள்ளுங்கள்! இறையருளிலிருந்து தூக்கி எறியப்பட்டார்கள், ஸமூத் இனத்தார்!

69

وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِیْمَ بِالْبُشْرٰی قَالُوْا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِیْذٍ ۟

மேலும் (பாருங்கள்!) நம்முடைய வானவர்கள் இப்ராஹீமிடம் ஒரு நற்செய்தியைக் கொண்டு வந்தார்கள்; “உங்கள் மீது சாந்தி நிலவட்டும்!” என்றார்கள். அதற்கு, “உங்கள் மீதும் சாந்தி நிலவுக!” என்று இப்ராஹீம் பதிலளித்தார். பிறகு சிறிது நேரத்திற்குள் (அவர்களுக்கு விருந்தளிப்பதற்காக) வறுத்த கன்றின் மாமிசத்தைக் கொண்டு வந்தார்.

70

فَلَمَّا رَاٰۤ اَیْدِیَهُمْ لَا تَصِلُ اِلَیْهِ نَكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِیْفَةً ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰی قَوْمِ لُوْطٍ ۟ؕ

ஆனால், அவர்களின் கைகள் உணவைத் தொடவே இல்லை என்பதை இப்ராஹீம் பார்த்தபோது அவர்களைப் பற்றி அவருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. மேலும், அவர்களைக் கண்டு அவர் அஞ்சினார். அதற்கு அவ்வானவர்கள், “நீர் அஞ்ச வேண்டாம்; திண்ணமாக நாங்கள் லூத் சமூகத்தாரின்பால் அனுப்பப்பட்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள்.

71

وَامْرَاَتُهٗ قَآىِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ یَعْقُوْبَ ۟

அப்போது இப்ராஹீமுடைய மனைவியும் நின்று கொண்டிருந்தார். அவர் (இதனைக் கேட்டதும்) சிரித்தார். நாம் அவருக்கு இஸ்ஹாக் (பிறக்கப்போவது) பற்றியும் இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூப் பற்றியும் நற்செய்தி அறிவித்தோம்!

72

قَالَتْ یٰوَیْلَتٰۤی ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِیْ شَیْخًا ؕ اِنَّ هٰذَا لَشَیْءٌ عَجِیْبٌ ۟

அதற்கு அவர் “அந்தோ! என் துர்பாக்கியமே! நானும் முதியவளாகி விட்டேன். என்னுடைய கணவராகிய இவரும் முதுமை அடைந்து விட்டார். இந்நிலையில் எனக்குக் குழந்தை பிறக்குமா? திண்ணமாக, இது ஒரு வியப்புக்குரிய செய்தியாய் இருக்கின்றது!” என்று கூறினார்.

73

قَالُوْۤا اَتَعْجَبِیْنَ مِنْ اَمْرِ اللّٰهِ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَیْكُمْ اَهْلَ الْبَیْتِ ؕ اِنَّهٗ حَمِیْدٌ مَّجِیْدٌ ۟

வானவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் கட்டளை குறித்து வியப்புறுகின்றீரா? இப்ராஹீமின் குடும்பத்தாரே! உங்கள்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய வாழ்த்துக்களும் பொழிந்து கொண்டிருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் பெரும் புகழுக்குரியவனாகவும், பெரும் மாட்சிமை உடையவனாகவும் இருக்கின்றான்.”

74

فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِیْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰی یُجَادِلُنَا فِیْ قَوْمِ لُوْطٍ ۟ؕ

இப்ராஹீம் அச்சம் அகன்று (குழந்தைப் பேறு பற்றிய நற்செய்தியால்) அவருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டபோது, லூத் இனத்தாரைப் பற்றி அவர் நம்மிடம் தர்க்கம் செய்யத் தொடங்கிவிட்டார்.

75

اِنَّ اِبْرٰهِیْمَ لَحَلِیْمٌ اَوَّاهٌ مُّنِیْبٌ ۟

திண்ணமாக, இப்ராஹீம் இரக்கமுடையவராகவும் மென்மையான உள்ளமுடையவராகவும் இருந்தார்.

76

یٰۤاِبْرٰهِیْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ ۚ وَاِنَّهُمْ اٰتِیْهِمْ عَذَابٌ غَیْرُ مَرْدُوْدٍ ۟

மேலும், எந்நிலையிலும் (நம் பக்கம்) மீளக்கூடியவராகவும் இருந்தார்! (இறுதியில் நம் வானவர்கள் அவரிடம் கூறினார்கள்:) “இப்ராஹீமே, இவ்வாறு தர்க்கம் செய்வதை விட்டுவிடுவீராக! திண்ணமாக, உம் அதிபதியின் கட்டளை வந்தாகிவிட்டது. இனி எவராலும் தடுத்து நிறுத்த முடியாத வேதனை அவர்களிடம் வந்தே தீரும்!”

77

وَلَمَّا جَآءَتْ رُسُلُنَا لُوْطًا سِیْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا یَوْمٌ عَصِیْبٌ ۟

மேலும், நம்முடைய வானவர்கள் லூத்திடம் வந்தபோது அவர் பீதியடைந்தார். மேலும், மனவேதனைக்குள்ளானார். மேலும், கூறலானார்: “இது துன்பமானதொரு நாளாகும்.”

78

وَجَآءَهٗ قَوْمُهٗ یُهْرَعُوْنَ اِلَیْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا یَعْمَلُوْنَ السَّیِّاٰتِ ؕ قَالَ یٰقَوْمِ هٰۤؤُلَآءِ بَنَاتِیْ هُنَّ اَطْهَرُ لَكُمْ فَاتَّقُوا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِیْ ضَیْفِیْ ؕ اَلَیْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِیْدٌ ۟

(இந்த விருந்தாளிகளைக் கண்டதும்) அவருடைய சமுதாயத்தினர் அவரது வீட்டை நோக்கி விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் முன்பே தீய செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள். லூத் (அவர்களிடம்) கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! இதோ! என்னுடைய பெண்மக்கள் இருக்கின்றனர், அவர்கள் உங்களுக்கு மிகவும் தூய்மையானவர்களாவர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! என் விருந்தாளிகள் விஷயத்தில் என்னைக் கேவலப்படுத்தாதீர்கள்! நேர்மையான சிந்தனை கொண்டவர் உங்களில் யாரும் இல்லையா?”

79

قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَنَا فِیْ بَنٰتِكَ مِنْ حَقٍّ ۚ وَاِنَّكَ لَتَعْلَمُ مَا نُرِیْدُ ۟

அதற்கு அவர்கள் “உம்முடைய பெண்மக்கள் எங்களுக்குத் தேவையில்லை என்பதை நீர் நன்கு அறிவீர். மேலும், நாங்கள் எதை விரும்புகின்றோம் என்பதையும் திண்ணமாக நீர் அறிவீர்!” என்று பதிலளித்தார்கள்.

80

قَالَ لَوْ اَنَّ لِیْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِیْۤ اِلٰی رُكْنٍ شَدِیْدٍ ۟

அதற்கு லூத், “அந்தோ! உங்களைத் திருத்துகின்ற அளவுக்கு என்னிடம் வலிமை இருந்திருக்கக் கூடாதா? அல்லது நான் புகலிடம் பெறும் அளவுக்கு ஒரு வலிமைமிக்க துணை எனக்கு இருந்திருக்கக் கூடாதா?” என்று கூறினார்.

81

قَالُوْا یٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ یَّصِلُوْۤا اِلَیْكَ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّیْلِ وَلَا یَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ ؕ اِنَّهٗ مُصِیْبُهَا مَاۤ اَصَابَهُمْ ؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ ؕ اَلَیْسَ الصُّبْحُ بِقَرِیْبٍ ۟

அப்பொழுது வானவர்கள் அவரிடம் கூறினார்கள்: “லூத்தே! திண்ணமாக நாங்கள் உம் இறைவனால் அனுப்பப்பட்ட வானவர்களாவோம். இவர்கள் உமக்கு எவ்விதத் தீங்கும் அளித்திட முடியாது! எனவே, இரவின் ஒரு பகுதி இருக்கும்போது நீர் உம்முடைய குடும்பத்தை அழைத்துக் கொண்டு சென்றுவிடும். உங்களில் எவரும் பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டாம்! ஆனால் உம்முடைய மனைவியை உம்முடன் அழைத்துச் செல்ல வேண்டாம்! ஏனெனில், எந்த வேதனை இம்மக்களைப் பீடிக்கப்போகிறதோ, அந்த வேதனை திண்ணமாக அவளையும் பீடிக்கப்போகிறது. இவர்களை அழிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம் அதிகாலையாகும். அதிகாலை வருவதற்கு வெகு நேரமா இருக்கிறது?”

82

فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِیَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَیْهَا حِجَارَةً مِّنْ سِجِّیْلٍ ۙ۬ مَّنْضُوْدٍ ۟ۙ

பிறகு நமது கட்டளை(க்குரிய நேரம்) வந்த போது, அந்த ஊரைத் தலைகீழாகப் புரட்டிவிட்டோம்! மேலும், அதன் மீது சுட்டகளிமண் கற்களைத் தொடர்ந்து பொழியச் செய்தோம்;

83

مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ ؕ وَمَا هِیَ مِنَ الظّٰلِمِیْنَ بِبَعِیْدٍ ۟۠

அக்கற்கள் ஒவ்வொன்றும் உம் இறைவனால் அடையாளம் இடப்பட்டிருந்தது! மேலும் அக்கிரமக்காரர்களுக்கு இது போன்ற தண்டனை தொலைவில் இல்லை!

84

وَاِلٰی مَدْیَنَ اَخَاهُمْ شُعَیْبًا ؕ قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ وَلَا تَنْقُصُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ اِنِّیْۤ اَرٰىكُمْ بِخَیْرٍ وَّاِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ مُّحِیْطٍ ۟

மேலும், மத்யன்வாசிகளிடம் அவர்களின் சகோதரர் ஷுஐபை நாம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்! அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லை. மேலும் அளவையிலும், நிறுவையிலும் குறைவு செய்யாதீர்கள்! (இன்று) உங்களை நல்ல நிலையில் நான் காண்கின்றேன். ஆனால் (விரைவில்) துன்பம் சூழும் ஒரு நாளின் வேதனை உங்களைப் பீடிக்குமோ என நான் அஞ்சுகின்றேன்.

85

وَیٰقَوْمِ اَوْفُوا الْمِكْیَالَ وَالْمِیْزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْیَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟

மேலும், என்னுடைய சமுதாயத்தினரே! நேர்மையான முறையில் முழுமையாய் அளந்து கொடுங்கள்; முழுமையாய் நிறுத்துக் கொடுங்கள்! மேலும் மக்களுக்கு அவர்களுடைய பொருட்களைக் குறைத்துத் தராதீர்கள்! பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரியாதீர்கள்!

86

بَقِیَّتُ اللّٰهِ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۚ۬ وَمَاۤ اَنَا عَلَیْكُمْ بِحَفِیْظٍ ۟

அல்லாஹ்வினால் மீதப்படுத்தப்பட்ட லாபமே உங்களுக்குச் சிறந்ததாகும் நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின்! ஆயினும் நான் எந்நிலையிலும் உங்களைக் கண்காணிப்பவன் அல்லன்.”

87

قَالُوْا یٰشُعَیْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّفْعَلَ فِیْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَلِیْمُ الرَّشِیْدُ ۟

அதற்கு அவர்கள், “ஷுஐபே! எங்கள் மூதாதையர் வணங்கி வந்தவற்றை நாங்கள் விட்டுவிட வேண்டும் என்றா அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது? உண்மையில் நீர் பெருந்தன்மையும் நேர்மையும் கொண்டவர்தாம்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.

88

قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَرَزَقَنِیْ مِنْهُ رِزْقًا حَسَنًا ؕ وَمَاۤ اُرِیْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰی مَاۤ اَنْهٰىكُمْ عَنْهُ ؕ اِنْ اُرِیْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ ؕ وَمَا تَوْفِیْقِیْۤ اِلَّا بِاللّٰهِ ؕ عَلَیْهِ تَوَكَّلْتُ وَاِلَیْهِ اُنِیْبُ ۟

அதற்கு ஷுஐப் கூறினார்: “என்னுடைய சமுதாயத்தினரே! நீங்களே சற்று சிந்தியுங்கள். நான் என் இறைவனிட மிருந்து தெளிவான சான்றினைப் பெற்றிருக்கிறேன். அத்துடன் அவன் தன் சார்பிலிருந்து தூய்மையான உணவையும் எனக்கு வழங்கி இருக்கின்றான். (அதற்குப் பிறகும் உங்களுடைய தவறான செயல்களிலும், தடுக்கப்பட்டவற்றை உண்பதிலும் உங்களோடு எவ்வாறு நான் கூட்டுச் சேர முடியும்?) மேலும், எவற்றைச் செய்ய வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கின்றேனோ அவற்றை நான் செய்வதற்கு ஒருபோதும் விரும்புவதில்லை. என்னால் முடிந்த வரை சீர்திருத்தம் செய்யவே நான் விரும்புகின்றேன். மேலும் (நான் ஆற்ற விரும்புகின்ற அனைத்தும்) அல்லாஹ்வின் பேருதவியைப் பொறுத்தே இருக்கின்றன. நான் அவனையே முழுமையாகச் சார்ந்துவிட்டேன்! மேலும், (ஒவ்வொரு விஷயத்திலும்) அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.

89

وَیٰقَوْمِ لَا یَجْرِمَنَّكُمْ شِقَاقِیْۤ اَنْ یُّصِیْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِیْدٍ ۟

மேலும், என் சமூகத்தினரே! என்னோடு நீங்கள் கொண்டுள்ள பிணக்கும், பகைமையும் நூஹுடைய சமுதாயத்தினரை அல்லது ஹூத் மற்றும் ஸாலிஹ் உடைய சமுதாயத்தினரைப் பீடித்தது போன்ற வேதனையில் உங்களையும் கொண்டு போய்ச் சேர்த்துவிடக் கூடாது. மேலும், லூத் சமூகத்தினரோ உங்களிலிருந்து வெகு தூரத்தில் இல்லை.

90

وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَیْهِ ؕ اِنَّ رَبِّیْ رَحِیْمٌ وَّدُوْدٌ ۟

எனவே, உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கேளுங்கள்! பிறகு அவன் பக்கம் மீளுங்கள்! திண்ணமாக, என் இறைவன் கருணை பொழிபவனாகவும் (தன் படைப்பினங்கள் மீது) பேரன்பு கொண்டவனாகவும் இருக்கின்றான்.”

91

قَالُوْا یٰشُعَیْبُ مَا نَفْقَهُ كَثِیْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِیْنَا ضَعِیْفًا ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ؗ وَمَاۤ اَنْتَ عَلَیْنَا بِعَزِیْزٍ ۟

அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: “ஷுஐபே! நீர் கூறுகின்ற பெரும்பாலான விஷயங்கள் எங்களுக்குப் புரிவதில்லை. மேலும், எங்களுக்கிடையே நீர் வலிமை குன்றியவராக இருப்பதைத்தான் நாங்கள் காண்கிறோம். உம்முடைய குடும்பத்தார் இல்லையென்றால், எப்பொழுதோ உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம்! மேலும் (நாங்கள் உம்மை மதிக்கும் அளவுக்கு) நீர் எங்களிடையே வலிமையுடையவர் அல்லர்!”

92

قَالَ یٰقَوْمِ اَرَهْطِیْۤ اَعَزُّ عَلَیْكُمْ مِّنَ اللّٰهِ ؕ وَاتَّخَذْتُمُوْهُ وَرَآءَكُمْ ظِهْرِیًّا ؕ اِنَّ رَبِّیْ بِمَا تَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟

ஷுஐப் கூறினார்: “என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வைவிட என்னுடைய குடும்பத்தார்களையா அதிக வலிமையுள்ளவர்களாக நீங்கள் கருதுகிறீர்கள்? (என்னுடைய குடும்பத்தாருக்கு அஞ்சுகின்றீர்கள்; ஆனால்) அல்லாஹ்வை அலட்சியமாகப் புறக்கணித்து விட்டீர்கள்! திண்ணமாக, என்னுடைய அதிபதி நீங்கள் செய்கின்றவற்றைச் சூழ்ந்தறிந்தவனாக இருக்கின்றான்.

93

وَیٰقَوْمِ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ اِنِّیْ عَامِلٌ ؕ سَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ یَّاْتِیْهِ عَذَابٌ یُّخْزِیْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ ؕ وَارْتَقِبُوْۤا اِنِّیْ مَعَكُمْ رَقِیْبٌ ۟

என் சமுதாயத்தினரே! நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நான் (எனது வழியில்) செயல்பட்டுக் கொண்டு இருப்பேன். இழிவுறுத்தும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், யார் பொய் உரைக்கின்றார் என்பதையும் விரைவில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனவே, நீங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்!”

94

وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّیْنَا شُعَیْبًا وَّالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَاَخَذَتِ الَّذِیْنَ ظَلَمُوا الصَّیْحَةُ فَاَصْبَحُوْا فِیْ دِیَارِهِمْ جٰثِمِیْنَ ۟ۙ

இறுதியில், நமது கட்டளைக்குரிய நேரம் வந்து விட்டது. அப்போது நமது அருளால் நாம் ஷுஐபையும் அவருடைய நம்பிக்கை கொண்ட தோழர்களையும் காப்பாற்றினோம். மேலும், அக்கிரமம் செய்தவர்களை ஒரு பயங்கரமான ஓசை தாக்கியது! அவர்கள் தம் ஊர்களில் தலைக்குப்புற வீழ்ந்து மடிந்தனர்.

95

كَاَنْ لَّمْ یَغْنَوْا فِیْهَا ؕ اَلَا بُعْدًا لِّمَدْیَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ۟۠

அங்கு அவர்கள் வாழவே இல்லை என்பது போல! தெரிந்து கொள்ளுங்கள்: இறையருளிலிருந்து மத்யன் வாசிகளும் தூக்கி எறியப்பட்டார்கள்; ஸமூத் இனத்தார் தூக்கி எறியப்பட்டது போன்று!

96

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟ۙ

மேலும், மூஸாவை ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய அரசுப் பிரமுகர்களிடம் நம் சான்றுகளுடனும், (தூதுத்துவத்திற்கான) வெளிப்படையான அத்தாட்சியுடனும் நாம் அனுப்பி வைத்தோம்.

97

اِلٰی فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهٖ فَاتَّبَعُوْۤا اَمْرَ فِرْعَوْنَ ۚ وَمَاۤ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِیْدٍ ۟

ஆயினும் அம்மக்கள் ஃபிர்அவ்னுடைய கட்டளையையே பின்பற்றினார்கள் அவனுடைய கட்டளை நேர்மையற்றதாக இருந்தபோதிலும்!

98

یَقْدُمُ قَوْمَهٗ یَوْمَ الْقِیٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ؕ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ ۟

மறுமைநாளில் அவன் தன் சமுதாயத்தினர் அனைவரையும்விட முன்னணியில் இருப்பான். மேலும் தன் தலைமையில் அவர்களை நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பான். சேருமிடங்களில் எத்துணைக் கொடிய இடமாகும் அது!

99

وَاُتْبِعُوْا فِیْ هٰذِهٖ لَعْنَةً وَّیَوْمَ الْقِیٰمَةِ ؕ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ ۟

மேலும், அம்மக்கள் மீது இம்மையிலும் சாபம் ஏற்பட்டது. மறுமையிலும் ஏற்பட்டே தீரும்! வழங்கப்படும் வெகுமதிகளில் எத்துணை மோசமான வெகுமதி இது!

100

ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْقُرٰی نَقُصُّهٗ عَلَیْكَ مِنْهَا قَآىِٕمٌ وَّحَصِیْدٌ ۟

இவை சில ஊர்களைப் பற்றிய வரலாறுகளாகும்; அவற்றை நாம் உமக்கு எடுத்துச் சொல்கின்றோம். அவற்றில் சில இன்றும் இருக்கின்றன; சில முற்றிலும் அழிந்துவிட்டன.

101

وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِیْ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَیْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَ ؕ وَمَا زَادُوْهُمْ غَیْرَ تَتْبِیْبٍ ۟

நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை; மாறாக அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டார்கள். மேலும் உம் இறைவனின் கட்டளை வந்துவிட்டபோது, அல்லாஹ்வை விடுத்து அவர்கள் அழைத்தவண்ணம் இருந்த அவர்களுடைய கடவுள்கள் அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. நாசத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் அவை அவர்களுக்குத் தரவில்லை.

102

وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰی وَهِیَ ظَالِمَةٌ ؕ اِنَّ اَخْذَهٗۤ اَلِیْمٌ شَدِیْدٌ ۟

மேலும் அக்கிரமம் புரிந்துகொண்டிருக்கக்கூடிய ஊர்களை உம் இறைவன் தண்டிக்கும்போது அவனுடைய தண்டனை இப்படித்தான் இருக்கும்! திண்ணமாக, அவனது தண்டனை வேதனை மிக்கதும் மிகக் கடுமையானதுமாகும்.

103

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ ؕ ذٰلِكَ یَوْمٌ مَّجْمُوْعٌ ۙ لَّهُ النَّاسُ وَذٰلِكَ یَوْمٌ مَّشْهُوْدٌ ۟

உண்மையில், மறுமைநாளின் வேதனை குறித்து அஞ்சும் ஒவ்வொருவருக்கும் இதில் ஒரு சான்று இருக்கிறது. அது மக்கள் அனைவரும் ஒன்று திரட்டப்படும் நாளாகும். அன்று நடைபெறுகின்ற அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறும்.

104

وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍ ۟ؕ

அந்நாளைக் கொண்டு வருவதில் நாம் அதிக தாமதம் செய்யப்போவதில்லை; நிர்ணயிக்கப்பட்ட சொற்ப காலத்தைத் தவிர!

105

یَوْمَ یَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖ ۚ فَمِنْهُمْ شَقِیٌّ وَّسَعِیْدٌ ۟

அந்நாள் வரும்போது இறைவனின் அனுமதி இன்றி எந்த மனிதனும் பேச முடியாது. பிறகு அவர்களில் சிலர் துர்பாக்கியவான்களாகவும் வேறு சிலர் நற்பேறுடையவர்களாகவும் இருப்பார்கள்.

106

فَاَمَّا الَّذِیْنَ شَقُوْا فَفِی النَّارِ لَهُمْ فِیْهَا زَفِیْرٌ وَّشَهِیْقٌ ۟ۙ

எவர்கள் துர்பாக்கியவான்களோ அவர்கள் நரகம் செல்வார்கள்! அங்கு (வெப்பம் மற்றும் தாகத்தின் கடுமையால்) மூச்சிரைக்கக் கூச்சலிடுவார்கள்; கதறுவார்கள்.

107

خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا یُرِیْدُ ۟

வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கு அவர்கள் அதே நிலையிலேயே கிடப்பார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! தான் நாடுவதைச் செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளவனாக அவன் இருக்கின்றான்.

108

وَاَمَّا الَّذِیْنَ سُعِدُوْا فَفِی الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ ؕ عَطَآءً غَیْرَ مَجْذُوْذٍ ۟

மேலும் எவர்கள் நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

109

فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّمَّا یَعْبُدُ هٰۤؤُلَآءِ ؕ مَا یَعْبُدُوْنَ اِلَّا كَمَا یَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ ؕ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِیْبَهُمْ غَیْرَ مَنْقُوْصٍ ۟۠

எனவே (நபியே!) இவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கடவுள்கள் குறித்து நீர் சற்றும் சந்தேகம் கொள்ள வேண்டாம். இவர்களோ முன்பு தம் மூதாதையர் எவ்வாறு ஆராதனை செய்து வந்தார்களோ அவ்வாறே (கண்மூடித்தனமாக) ஆராதனை செய்து வருகிறார்கள். மேலும், திண்ணமாக நாம் இவர்களுக்குரிய பங்கினை யாதொரு குறைவுமின்றி நிறைவாகக் கொடுப்போம்.

110

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟

நாம் (இதற்கு முன்பு) மூஸாவுக்கும் வேதத்தை அருளியிருக்கின்றோம். அது குறித்தும் கருத்து முரண்பாடு கொள்ளப்பட்டது; (இன்று உமக்கு அருளப்பட்டிருக்கும் இந்த வேதத்தை ஏற்பதில் கருத்து முரண்பாடு கொள்ளப்படுவதைப் போன்று!) உம் இறைவனிடம் முன்னரே ஒரு விஷயம் முடிவு செய்யப்படாதிருந்தால், கருத்து முரண்பாடு கொண்டவர்களுக் கிடையே எப்போதோ தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். உண்மை யாதெனில் இவர்கள் இதனைக் குறித்து கடும் சந்தேகத்தில் இருக்கிறார்கள். மேலும், மனக்கலக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

111

وَاِنَّ كُلًّا لَّمَّا لَیُوَفِّیَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ ؕ اِنَّهٗ بِمَا یَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟

மேலும், உம் இறைவன் இவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் செயல்களுக்குரிய கூலியை நிறைவாகக் கொடுத்தே தீருவான்! திண்ணமாக, அவன் அவர்களின் செயல்கள் அனைத்தையும் நன் கறிந்தவனாய் இருக்கின்றான்.

112

فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا ؕ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

எனவே, (நபியே!) நீரும் (நிராகரிப்பையும், கீழ்ப்படியாமையையும் கைவிட்டு, நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் பக்கம்) திரும்பிய உம்முடைய தோழர்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்டது போன்று நேரான வழியில் நிலைத்திருங்கள். மேலும், அடிபணிவதற்கான வரம்புகளை மீறிவிடாதீர்கள். நீங்கள் செய்துகொண்டிருக்கும் அனைத்தையும் திண்ணமாக உங்கள் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்

113

وَلَا تَرْكَنُوْۤا اِلَی الَّذِیْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُ ۙ وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِیَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ ۟

இந்த அக்கிரமக்காரர்களின் பக்கம் சிறிதும் சாய்ந்துவிடாதீர்கள். அவ்வாறு சாய்ந்தால், நரக நெருப்பு உங்களைச் சூழ்ந்து கொள்ளும்! மேலும் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பிறகு (எங்கிருந்தும்) உங்களுக்கு உதவி கிடைக்காது.

114

وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَیِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ الَّیْلِ ؕ اِنَّ الْحَسَنٰتِ یُذْهِبْنَ السَّیِّاٰتِ ؕ ذٰلِكَ ذِكْرٰی لِلذّٰكِرِیْنَ ۟ۚ

மேலும், பகலின் இரு ஓரங்களிலும் இரவு சிறிது கழிந்த நேரத்திலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! திண்ணமாக, நன்மைகள் தீமைகளைக் களைந்து விடுகின்றன. அல்லாஹ்வை நினைவு கூர்கின்றவர்களுக்கு இது ஒரு நினைவூட்டி ஆகும்.

115

وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟

மேலும், பொறுமையைக் கைக்கொள்வீராக! நற்செயல்கள் புரிவோரின் கூலியை திண்ணமாக அல்லாஹ் வீணாக்குவதில்லை.

116

فَلَوْلَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِیَّةٍ یَّنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِی الْاَرْضِ اِلَّا قَلِیْلًا مِّمَّنْ اَنْجَیْنَا مِنْهُمْ ۚ وَاتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِیْهِ وَكَانُوْا مُجْرِمِیْنَ ۟

பூமியில் குழப்பம் விளைவிப்பதைத் தடுக்கக்கூடிய நல்லவர்கள் உங்களுக்கு முன் வாழ்ந்து சென்ற சமூகங்களில் இருந்திருக்க வேண்டாமா? அப்படிப்பட்டவர்கள் இருந்தாலும் மிகக் குறைவாக இருந்திருக்கிறார்கள். அவர்களை அம்மக்களிட மிருந்து நாம் காப்பாற்றினோம். ஆனால் அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுகபோக வாழ்க்கையில் மூழ்கிக் கிடந்தார்கள்; மேலும் குற்றவாளிகளாக இருந்தார்கள்.

117

وَمَا كَانَ رَبُّكَ لِیُهْلِكَ الْقُرٰی بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ ۟

மேலும், உம் இறைவன் எந்த ஊரையும் அவ்வூர் மக்கள் சீர்திருத்தம் புரிவோராய் இருக்கும் நிலையில், நியாயமின்றி அழித்துவிடக் கூடியவன் அல்லன்.

118

وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً وَّلَا یَزَالُوْنَ مُخْتَلِفِیْنَ ۟ۙ

உம் இறைவன் நாடினால், நிச்சயம் மனித இனம் முழுவதையும் ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு இல்லை.) ஆதலால், இனி அவர்கள் மாறுபட்ட வழிமுறைகளில்தான் சென்று கொண்டிருப்பார்கள்.

119

اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ ؕ وَلِذٰلِكَ خَلَقَهُمْ ؕ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟

மேலும், உம் இறைவன் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்கள் மட்டுமே மாறுபட்ட வழியில் செல்வதிலிருந்து விலகியிருப்பார்கள். இதற்காகவே (தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கிச் சோதித்துப் பார்ப்பதற்காகவே) அவன் அவர்களைப் படைத்துள்ளான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவரைக் கொண்டும் திண்ணமாக நான் நரகத்தை நிரப்புவேன் எனும் உம் இறைவனின் வாக்கு நிறைவேறிவிட்டது.

120

وَكُلًّا نَّقُصُّ عَلَیْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ ۚ وَجَآءَكَ فِیْ هٰذِهِ الْحَقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟

(நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக் கூறும் இந்த நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால், அவற்றின் மூலம் நாம் உமது இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும், இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன.

121

وَقُلْ لِّلَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰی مَكَانَتِكُمْ ؕ اِنَّا عٰمِلُوْنَ ۟ۙ

ஆனால், நம்பிக்கை கொள்ளாதவர்களை நோக்கி நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருங்கள்; நாங்கள் எங்கள் வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

122

وَانْتَظِرُوْا ۚ اِنَّا مُنْتَظِرُوْنَ ۟

விளைவை நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.”

123

وَلِلّٰهِ غَیْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَیْهِ یُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَیْهِ ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟۠

வானங்கள், பூமி ஆகியவற்றில் மறைந்துள்ள அனைத்தும் அல்லாஹ்வின் அதிகாரத்திற்குட்பட்டனவாகும். மேலும், அனைத்து விவகாரங்களும் அவனிடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன. எனவே, (நபியே!) நீர் அவனுக்கே அடிபணிவீராக! மேலும் அவனையே முழுவதும் சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்து கொண்டிருப்பவை அனைத்தையும் உம் இறைவன் கவனிக்காமல் இல்லை.

PreviousYunusNextYusuf

0:00–:––