All Surahs

Surah 55

الرحمن

Ar-Rahman

55. ஸூரத்துர் ரஹ்மான் (அளவற்ற அருளாளன்)

78 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

اَلرَّحْمٰنُ ۟ۙ

அளவிலாக் கருணையுள்ள (இறை)வன்

2

عَلَّمَ الْقُرْاٰنَ ۟ؕ

இந்தக் குர்ஆனைக் கற்றுத் தந்தான்.

3

خَلَقَ الْاِنْسَانَ ۟ۙ

அவனே மனிதனைப் படைத்தான்;

4

عَلَّمَهُ الْبَیَانَ ۟

அவனுக்குப் பேசக் கற்றுக்கொடுத்தான்.

5

اَلشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ ۟ۙ

சூரியனும், சந்திரனும் ஓர் ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டிருக்கின்றன.

6

وَّالنَّجْمُ وَالشَّجَرُ یَسْجُدٰنِ ۟

மேலும், நட்சத்திரங்கள், மரங்கள் ஆகிய அனைத்தும் சிரம்பணிந்து கொண்டிருக்கின்றன.

7

وَالسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِیْزَانَ ۟ۙ

அவன் வானத்தை உயர்த்தினான். தராசை நிலைநாட்டினான்,

8

اَلَّا تَطْغَوْا فِی الْمِیْزَانِ ۟

நீங்கள் தராசில் நீதி தவறிவிடக்கூடாது என்பதற்காக!

9

وَاَقِیْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِیْزَانَ ۟

மேலும், நீதியுடன் மிகச் சரியாக நிறுங்கள்; தராசில் எடைக்குறைவு ஏற்படுத்தாதீர்கள்!

10

وَالْاَرْضَ وَضَعَهَا لِلْاَنَامِ ۟ۙ

பூமியை அவன் எல்லாப் படைப்புகளுக்காகவும் அமைத்தான்.

11

فِیْهَا فَاكِهَةٌ وَّالنَّخْلُ ذَاتُ الْاَكْمَامِ ۟ۖ

அதில் விதவிதமான சுவைமிகு கனிகள் ஏராளமாய் இருக்கின்றன. பேரீத்த மரங்களும் இருக்கின்றன. அவற்றின் பழங்கள் பாளைகளால் மூடப்பட்டு இருக்கின்றன.

12

وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّیْحَانُ ۟ۚ

விதவிதமான தானியங்கள் உள்ளன. அவற்றில் உமியும் உண்டு; மணியும் உண்டு.

13

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த அருட்கொடைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

14

خَلَقَ الْاِنْسَانَ مِنْ صَلْصَالٍ كَالْفَخَّارِ ۟ۙ

ஓடு போன்று, தட்டினால் ஓசை வரக்கூடிய பேதகமடைந்த களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தான்.

15

وَخَلَقَ الْجَآنَّ مِنْ مَّارِجٍ مِّنْ نَّارٍ ۟ۚ

மேலும், ஜின்களைத் தீப்பிழம்பிலிருந்து படைத்தான்.

16

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்மிக்க விநோதங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

17

رَبُّ الْمَشْرِقَیْنِ وَرَبُّ الْمَغْرِبَیْنِ ۟ۚ

இரு கிழக்குகள், இரு மேற்குகள் அனைத்தின் அதிபதியும் பரிபாலகனும் அவனே!

18

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த ஆற்றல்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

19

مَرَجَ الْبَحْرَیْنِ یَلْتَقِیٰنِ ۟ۙ

அவன் இரு கடல்களையும் ஒன்றோடொன்று சங்கமிக்கச் செய்தான்;

20

بَیْنَهُمَا بَرْزَخٌ لَّا یَبْغِیٰنِ ۟ۚ

ஆயினும், அவ்விரண்டுக்குமிடையே ஒரு தடுப்பு இருக்கின்றது. அதனை அவை மீறுவதில்லை.

21

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! நீங்கள் உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த விநோதங்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?

22

یَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ ۟ۚ

இந்தக் கடல்களிலிருந்து முத்துக்களும், பவளங்களும் வெளிப்படுகின்றன.

23

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியுடைய வல்லமையின் எந்த எந்த சிறப்புகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

24

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَـٰٔتُ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ۚ

மேலும், கடலில் மலைகளைப் போன்று உயர்ந்து நிற்கும் இந்தக் கப்பல்களும் அவனுக்கே உரியன.

25

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠

ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?

26

كُلُّ مَنْ عَلَیْهَا فَانٍ ۟ۚۖ

இந்தப் பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு பொருளும் அழியக்கூடியதே!

27

وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ

கம்பீரமும், கண்ணியமும் உடைய உம் அதிபதி மட்டுமே நிலைத்திருப்பவன் ஆவான்.

28

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் எந்த எந்த சிறப்பம்சங்களை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

29

یَسْـَٔلُهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلَّ یَوْمٍ هُوَ فِیْ شَاْنٍ ۟ۚ

பூமியிலும் வானங்களிலும் உள்ளவை அனைத்தும் தம் தேவைகளை அவனிடமே வேண்டிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கணமும், அவன் ஒரு புதிய மாட்சிமையின் நிலையில் இருக்கின்றான்.

30

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழ்மிக்க எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

31

سَنَفْرُغُ لَكُمْ اَیُّهَ الثَّقَلٰنِ ۟ۚ

பூமிக்குச் சுமையாய் இருப்பவர்களே! அதிவிரைவில் நாம் உங்களை விசாரணை செய்வதற்காக ஓய்வாகிவிடுவோம்.

32

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

பின்னர் உங்கள் அதிபதியின் எந்த எந்த பேருபகாரங்களை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள் (என்பதை நாம் பார்த்துக் கொள்வோம்.)

33

یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا ؕ لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ ۟ۚ

ஓ, ஜின் மற்றும் மனிதக்கூட்டங்களே! வானங்கள் மற்றும் பூமியின் எல்லைகளை விட்டு ஓடிச் செல்ல உங்களால் முடியுமானால் ஓடிப் பாருங்கள். உங்களால் ஓடிச் செல்லவே முடியாது; அதற்கெனப் பெரும் வலிமை வேண்டும்.

34

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

35

یُرْسَلُ عَلَیْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ۬ وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ ۟ۚ

(அவ்விதம் நீங்கள் தப்பியோட முயன்றால்) உங்கள் மீது தீ ஜுவாலையும் புகையும் ஏவிவிடப்படும். அவற்றை எதிர்த்து நிற்க உங்களால் இயலாது.

36

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

(ஓ, ஜின்களே! மனிதர்களே!) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் மறுப்பீர்கள்?

37

فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ ۟ۚ

பின்னர், வானம் பிளந்து செந்தோலைப் போன்று சிவப்பாகிவிடும்போது (என்ன நிகழும்?)

38

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

ஓ, ஜின்களே! மனிதர்களே! அப்போது நீங்கள் உங்கள் இறைவனின் எந்த எந்த ஆற்றல்களைப் பொய்யெனக் கூறுவீர்கள்?

39

فَیَوْمَىِٕذٍ لَّا یُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ ۟ۚ

அந்நாளில், எந்த மனிதனிடமும் எந்த ஜின்னிடமும் அவரவருடைய பாவத்தைப் பற்றி வினவ வேண்டிய அவசிய மிராது!

40

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

நீங்கள் இரு கூட்டத்தாரும் உங்களுடைய இறைவனின் எந்த எந்த பேருபகாரங்களை மறுக்கிறீர்கள்? (எனத் தெரிந்துவிடும்).

41

یُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِیْمٰهُمْ فَیُؤْخَذُ بِالنَّوَاصِیْ وَالْاَقْدَامِ ۟ۚ

அங்கு குற்றவாளிகள் தங்களின் முகக்கூறுகளால் அடையாளம் கண்டு கொள்ளப்படுவார்கள். மேலும், அவர்களின் உச்சி முடிகளையும் கால்களையும் பிடித்து இழுக்கப்படும்.

42

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

(அவ்வேளை) உங்கள் இறைவனின் எந்த எந்த வல்லமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

43

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیْ یُكَذِّبُ بِهَا الْمُجْرِمُوْنَ ۟ۘ

அப்பொழுது கூறப்படும்: ஆம்! இதுவேதான் அந்த நரகம்! இதனைத்தான் குற்றவாளிகள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்தார்கள்.

44

یَطُوْفُوْنَ بَیْنَهَا وَبَیْنَ حَمِیْمٍ اٰنٍ ۟ۚ

அதே நரகத்துக்கும், மிகக் கடுமையாக கொதிக்கும் நீருக்கும் இடையே அவர்கள் சுற்றிக் கொண்டிருப் பார்கள்.

45

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠

பின்னர், உங்கள் இறைவனின் எந்த எந்த வலிமைகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

46

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ ۟ۚ

மேலும், தன் அதிபதியின் திருமுன் நிற்க வேண்டியது குறித்து அச்சம் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இரண்டு சுவனங்கள் உள்ளன.

47

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

48

ذَوَاتَاۤ اَفْنَانٍ ۟ۚ

அவையிரண்டும் பசுமையான கிளைகள் நிறைந்தவை!

49

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

50

فِیْهِمَا عَیْنٰنِ تَجْرِیٰنِ ۟ۚ

அந்த இரண்டு சுவனங்களிலும் இரண்டு ஊற்றுகள் ஓடிக்கொண்டிருக்கும்.

51

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

52

فِیْهِمَا مِنْ كُلِّ فَاكِهَةٍ زَوْجٰنِ ۟ۚ

அந்த இரண்டு சுவனங்களில் இருக்கும் ஒவ்வொரு பழமும் இரு வகையானவை.

53

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

54

مُتَّكِـِٕیْنَ عَلٰی فُرُشٍ بَطَآىِٕنُهَا مِنْ اِسْتَبْرَقٍ ؕ وَجَنَا الْجَنَّتَیْنِ دَانٍ ۟ۚ

சுவனவாசிகள் விரிப்புகளில் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள். அவற்றின் உட்பாகங்கள் அடர்த்தியான பட்டுத்துணியால் ஆனவையாகும். மேலும், இரு தோட்டங்களின் கிளைகள் பழங்களால் நிரம்பித் தாழ்ந்துவிட்டிருக்கும்.

55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

56

فِیْهِنَّ قٰصِرٰتُ الطَّرْفِ ۙ لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ

இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நாணும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள்; இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த் திருக்க மாட்டார்கள்.

57

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகு மதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

58

كَاَنَّهُنَّ الْیَاقُوْتُ وَالْمَرْجَانُ ۟ۚ

அந்தப் பெண்கள் மிக்க அழகானவர்கள், மாணிக்கத்தையும் முத்தையும் போன்று!

59

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

60

هَلْ جَزَآءُ الْاِحْسَانِ اِلَّا الْاِحْسَانُ ۟ۚ

நன்மையின் கூலி நன்மையைத் தவிர வேறெதுவாய் இருக்க முடியும்?

61

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

பின்னர் ஓ, ஜின்களே! மனிதர்களே! உங்கள் அதிபதியின் பெரும் புகழுக்குரிய எந்த எந்தத் தன்மைகளை நீங்கள் பொய்யென மறுப்பீர்கள்?

62

وَمِنْ دُوْنِهِمَا جَنَّتٰنِ ۟ۚ

அந்த இரு தோட்டங்களைத் தவிர வேறு இரண்டு தோட்டங்களும் இருக்கும்.

63

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۙ

உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

64

مُدْهَآمَّتٰنِ ۟ۚ

அடர்த்தியான, பசுமையான சுவனங்கள்!

65

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

66

فِیْهِمَا عَیْنٰنِ نَضَّاخَتٰنِ ۟ۚ

அவ்விரு தோட்டங்களிலும் இரு ஊற்றுகள் நீர்த்தாரைகளைப் போன்று பீறிட்டுப் பொங்கிக் கொண்டிருக்கும்.

67

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

68

فِیْهِمَا فَاكِهَةٌ وَّنَخْلٌ وَّرُمَّانٌ ۟ۚ

அவ் விரண்டிலும் ஏராளமான கனிகளும், பேரீச்சம் பழங்களும், மாதுளங்கனிகளும் இருக்கும்.

69

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

70

فِیْهِنَّ خَیْرٰتٌ حِسَانٌ ۟ۚ

இந்த அருட்கொடைகளுடன் நன்னடத்தையும், பேரழகும் கொண்ட மனைவிகளும் இருப்பர்.

71

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

72

حُوْرٌ مَّقْصُوْرٰتٌ فِی الْخِیَامِ ۟ۚ

கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட அழகிய பெண்களும் (ஹூரிகள்) இருப்பர்.

73

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟ۚ

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

74

لَمْ یَطْمِثْهُنَّ اِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ ۟ۚ

இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும் ஜின்னும் அந்தப் பெண்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.

75

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் இறைவனின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

76

مُتَّكِـِٕیْنَ عَلٰی رَفْرَفٍ خُضْرٍ وَّعَبْقَرِیٍّ حِسَانٍ ۟ۚ

அந்தச் சுவனவாசிகள், பச்சைக் கம்பளங்களிலும், விலைமதிப்பற்ற அழகிய விரிப்புகளிலும் தலையணைகளை வைத்து சாய்ந்திருப்பார்கள்.

77

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

உங்கள் அதிபதியின் எந்த எந்த வெகுமதிகளை நீங்கள் பொய்யெனக் கூறுவீர்கள்?

78

تَبٰرَكَ اسْمُ رَبِّكَ ذِی الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟۠

பெரும் அருட்பாக்கியங்கள் கொண்டதாக இருக்கின்றது, மாட்சிமையும் கண்ணியமும் மிக்க உம் இறைவனின் திருப்பெயர்!

PreviousAl-QamarNextAl-Waqiah

0:00–:––