All Surahs

Surah 75

القيامة

Al-Qiyamah

75. ஸூரத்துல் கியாமா (மறுமை நாள்)

40 verses

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ

1

لَاۤ اُقْسِمُ بِیَوْمِ الْقِیٰمَةِ ۟ۙ

இல்லை! நான் மறுமைநாளின் மீது சத்தியம் செய்கின்றேன்.

2

وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِ ۟ؕ

இல்லவே இல்லை; இடித்துரைக்கும் மனத்தின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.

3

اَیَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗ ۟ؕ

அவனுடைய எலும்புகளை நம்மால் ஒன்றுதிரட்ட முடியாது என்று மனிதன் கருதிக் கொண்டிருக்கின்றானா?

4

بَلٰى قٰدِرِیْنَ عَلٰۤی اَنْ نُّسَوِّیَ بَنَانَهٗ ۟

ஏன் முடியாது? நாமோ அவனுடைய விரல்களின் நுனியைக்கூட மிகத் துல்லியமாக அமைப்பதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்.

5

بَلْ یُرِیْدُ الْاِنْسَانُ لِیَفْجُرَ اَمَامَهٗ ۟ۚ

ஆனால், மனிதன் எதிர்காலத்திலும் தீமைகளைச் செய்துகொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றான்.

6

یَسْـَٔلُ اَیَّانَ یَوْمُ الْقِیٰمَةِ ۟ؕ

“அந்த மறுமைநாள் எப்போது வரும்?” என்று அவன் கேட்கின்றான்.

7

فَاِذَا بَرِقَ الْبَصَرُ ۟ۙ

பிறகு, பார்வை நிலைகுத்தி விடும்போது,

8

وَخَسَفَ الْقَمَرُ ۟ۙ

மேலும், சந்திரன் ஒளி குன்றிப் போகும்போது,

9

وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ ۟ۙ

மேலும் சந்திரனும், சூரியனும் ஒன்றாக இணைக்கப்படும்போது;

10

یَقُوْلُ الْاِنْسَانُ یَوْمَىِٕذٍ اَیْنَ الْمَفَرُّ ۟ۚ

அந்நாளில் இதே மனிதன் “நான் எங்கே சென்று ஓடி ஒளிவது?” என்று கேட்பான்.

11

كَلَّا لَا وَزَرَ ۟ؕ

ஒருபோதுமில்லை! அங்கு எந்தப் புகலிடமும் இருக்காது.

12

اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمُسْتَقَرُّ ۟ؕ

அந்த நாளில் உன் அதிபதியின் முன்பே சென்றடைய வேண்டியிருக்கும்.

13

یُنَبَّؤُا الْاِنْسَانُ یَوْمَىِٕذٍۭ بِمَا قَدَّمَ وَاَخَّرَ ۟ؕ

அந்த நாளில் மனிதனுக்கு, அவனுடைய முந்தைய, பிந்தைய செயல்கள் அனைத்தும் எடுத்துக் காண்பிக்கப்படும்.

14

بَلِ الْاِنْسَانُ عَلٰی نَفْسِهٖ بَصِیْرَةٌ ۟ۙ

ஏன், மனிதன் தன்னைப் பற்றி நன்கு அறிந்தவனாக இருப்பான்;

15

وَّلَوْ اَلْقٰى مَعَاذِیْرَهٗ ۟ؕ

அவன் எவ்வளவுதான் சாக்கு போக்குகளைக் கூறினாலும் சரியே!

16

لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖ ۟ؕ

(நபியே!) இந்த வஹியை* அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்!

17

اِنَّ عَلَیْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗ ۟ۚۖ

அதை நினைவில் நிறுத்தச் செய்வதும், ஓதும்படிச் செய்வதும் நமது பொறுப்பாகும்;

18

فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ ۟ۚ

ஆகையால் நாம் இதனை ஓதிக் காட்டும்போது அவ்வாறு ஓதிக்காட்டுவதை நீர் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருக்கவும்.

19

ثُمَّ اِنَّ عَلَیْنَا بَیَانَهٗ ۟ؕ

பின்னர், இதன் கருத்தை விளக்குவதும் நமது பொறுப்பே ஆகும்.

20

كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۟ۙ

ஒருபோதுமில்லை. உண்மை யாதெனில், நீங்கள் உடனடியாகக் கிடைக்கக் கூடியதை (அதாவது இம்மையை) நேசிக்கின்றீர்கள்;

21

وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ۟ؕ

மறுமையை விட்டுவிடுகின்றீர்கள்.

22

وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاضِرَةٌ ۟ۙ

அந் நாளில் சில முகங்கள் பொலிவுடன் விளங்கும்;

23

اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ ۟ۚ

தம்முடைய அதிபதியைப் பார்த்த வண்ணமிருக்கும்.

24

وَوُجُوْهٌ یَّوْمَىِٕذٍۭ بَاسِرَةٌ ۟ۙ

வேறுசில முகங்கள் துயரமடைந்திருக்கும்.

25

تَظُنُّ اَنْ یُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ۟ؕ

மேலும், இடுப்பை முறிக்கும் அனுபவங்கள் அவற்றிற்கு ஏற்படப்போகின்றன என்று புரிந்து கொண்டிருக்கும்.

26

كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ۟ۙ

ஒருபோதுமில்லை! உயிர் தொண்டை வரை எட்டும்போது,

27

وَقِیْلَ مَنْ ٚ رَاقٍ ۟ۙ

மேலும், “மந்திரித்து ஊதுபவர் எவரேனும் உண்டா?” என்று கேட்கப்படும்போது,

28

وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُ ۟ۙ

மேலும் இது உலகைவிட்டுப் பிரியும் நேரம் என்று மனிதன் புரிந்துகொள்ளும் போது,

29

وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ۟ۙ

கெண்டைக்கால், கெண்டைக்காலுடன் பின்னிப் பிணையும் போது,

30

اِلٰى رَبِّكَ یَوْمَىِٕذِ لْمَسَاقُ ۟ؕ۠

அந்நாளில்தான் உன் அதிபதியின் பக்கம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.

31

فَلَا صَدَّقَ وَلَا صَلّٰى ۟ۙ

ஆனால், அவன் உண்மையென ஏற்கவுமில்லை; தொழவுமில்லை.

32

وَلٰكِنْ كَذَّبَ وَتَوَلّٰى ۟ۙ

மாறாகப் பொய்யென வாதிட்டான்; திரும்பிச் சென்றான்.

33

ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهْلِهٖ یَتَمَطّٰى ۟ؕ

பின்னர், ஆணவம் கொண்டு தன் குடும்பத்தாரிடம் சென்றுவிட்டான்.

34

اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ۙ

இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!

35

ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰى ۟ؕ

ஆம்! இந்த நடத்தை உனக்குத்தான் பொருத்தமானது; உனக்குத்தான் அழகானது!

36

اَیَحْسَبُ الْاِنْسَانُ اَنْ یُّتْرَكَ سُدًی ۟ؕ

மனிதன் வெறுமனே விட்டுவிடப்படுவான் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றானா என்ன?

37

اَلَمْ یَكُ نُطْفَةً مِّنْ مَّنِیٍّ یُّمْنٰى ۟ۙ

(கருவறையில்) செலுத்தப்படும் அற்பமான இந்திரியத் துளியாய் அவன் இருக்கவில்லையா?

38

ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰى ۟ۙ

பின்னர் அவன் ஓர் இரத்தக்கட்டியாக ஆனான். பின்னர், அல்லாஹ் அவனுடைய உடலைப் படைத்தான். அவனுடைய உறுப்புகளைப் பொருத்தமாக அமைத்தான்.

39

فَجَعَلَ مِنْهُ الزَّوْجَیْنِ الذَّكَرَ وَالْاُ

பிறகு, அவனிலிருந்து ஆண் பெண் என இரு இனங்களை உருவாக்கினான்.

40

اَلَیْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰى ۟۠

இத்தகைய இறைவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்திட ஆற்றலுடையவன் இல்லையா, என்ன?

PreviousAl-MuddaththirNextAl-Insan

0:00–:––