وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக!
Surah 91
Ash-Shams
91. ஸூரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)
15 verses
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக!
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
மேலும், சந்திரன் மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது!
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது!
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது!
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
மேலும், வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக!
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
மேலும், பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக!
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர்,
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟
அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟
திண்ணமாக, வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப்படுத்தியவன்;
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ
மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
ஸமூத் சமுதாயத்தார் தங்கள் வரம்பு மீறிய போக்கினால் பொய்யெனத் தூற்றினார்கள்.
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟
அவர்களில் மிகவும் கேடுகெட்ட ஒருவன் எழுந்து வந்தபோது
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).”
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟
ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான்.
وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠
மேலும், (தனது இந்தச் செயலின்) எந்தவொரு தீயவிளைவு பற்றியும் அவனுக்கு அச்சம் இல்லை.